முலைகளின் ஆல்பம்















பேருந்து படிக்கட்டு விளிம்பில்
நின்றுகொண்டிருந்த நான்
சடாரென்று கோணம் மாற்றினேன்
எனக்கும் மேலே
கைதூக்கி நின்ற பெண்களின்
மார்புகளை ரசிப்பதற்காய்.

சற்றுநாள் முன்னரே
மணமாகித் தாய்வீடு வந்திருந்த
எதிர்வீட்டுப்பெண்ணின்
மார்பு ரசித்தேன்
மாசமாயிருப்பாளோ என்னும்
உறுத்தலோடேயே.

கல்லூரியில் கண்ட
கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய
கொழுத்த முலைகள்
இன்றைய இரவை
ஈரப்படுத்தக்கூடும்.
திரைகளெங்கும் நாயகிகள்
முலைகளாய் உணரப்படுகிறார்கள்.

அடிக்கடி ஆடைகளைச்
சரிசெய்துகொள்வது வேறு
நம் கனவுகளின் பரப்பை
அகலப்படுத்துகின்றன.
மார்புகள் இல்லாது போனால்
எல்லாப் பெண்களோடும்
உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.

எப்போதேனும் தட்டுப்படும்
மார்புகளின் ஸ்பரிசம்
கிளர்ச்சியூட்டும் வேளையில்.
இப்படி எண்ணத்தோன்றும்
வெறித்து நோக்கும்
ஆண்களின் கண்களே
முலைக்காம்புகள் ஆயினவோ.

                                                   (நன்றி : கருப்பு 2002)

11 comments:

said...

எங்கெங்கு காணினும் ...

கடைசி 2 வரிகளை எப்படித்தான் யோசிச்சீங்களோன்னு ஆச்சரியப்படவைக்குது.

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

said...

nallairukku.
vazhththukkal

said...

Arumai!!

said...

மிகவும் ரசித்தேன்...கடைசி புரியவில்லை ... ஆண்களின் கண்கள் தான் காரணம் என்கிறேர்களா ?

said...

வெகு அருமை!

said...

//மார்புகள் இல்லாது போனால்
எல்லாப் பெண்களோடும்
உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.
//
ம்ம்...நிச்சியமாய்..

said...

//மார்புகள் இல்லாது போனால்
எல்லாப் பெண்களோடும்
உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.//

மார்புகளை மறைக்காதுபோனால் எல்லாப்பெண்களோடும் உறுத்தலின்றிப் பழகலாம்.

said...

அருமை
மிக அருமை

said...

வரிகளின் தொடக்கத்தில் வருத்தமுறச் செய்தாலும் இறுதியோ இன்னும் நெஞ்சில் நிற்கின்றது.

அருமை.

நன்றி

said...

சிறப்பனா கவிதை நான் ரசித்த கவிதை பெண்ணின் கவிதைகளின் மாா்பகமும் ஓன்று சிறப்பு சிறப்பு சிறப்பு